Friday, February 16, 2007

நீண்ட கால உறவிது

வார்த்தகளில் சொல்லவா?

வாழ்ந்து பார்த்து சொல்லவா?

மறக்காமல் தேடுங்கள்

மனதிற்கென்று ஒரு நட்பை!

Saturday, December 30, 2006

வெறுமைகளால் ஆன நாட்கள்


வலிய விடுப்பு எடுத்து ஊர்- திரும்பி
அம்மாவிடம் கதைத்து
அண்ணன் மகன் குறும்புகளை
அவள் பட்டியலிட கண்ணில் - நீர்
வழிய சிரித்து புதுப்படம்
குறுந்தட்டில் போட்டு குடும்பமே
ஒன்றாய் படம் பார்த்து
"மணி 3 ஆகுது போய் படுங்கள் என" ஏச்சு
வாங்கி நிறைவாய் மெத்தையில்
படுக்க போகுமுன் சிரித்தும் - மகிழ்ந்தும்
என்ன பயன் நாங்கள்
பேசிக்கொண்டு ஆனது நாட்கள் 5

Wednesday, December 27, 2006

கிடைத்தற்கரியது


பொதி மூட்டை போல் - பாட புத்தகங்களை
சுமக்கும் பள்ளிச்சிறுவனாய்
உன் நினைவுகளை சுமந்தலைகிறேன்
எழுதுவதற்கும் பேசுவதற்கும்
யாருமற்ற நேரங்களில் உன்-
நினைவுகள் வருவதில்லை
என்ன செய்வது நாளேல்லாம்
எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்- தானே
இருக்கிறேன் உன் நினைவுகளோடு
கஞ்சன் கையில் கிடைத்த தங்ககாசு- நீ
அடிக்கடி எடுத்து பார்த்தும்
ஒளித்து வைத்தும்
மகிழ்கிறேன்- நான் மட்டும்

Thursday, November 23, 2006

If Statue of Liberty was in India


ம்ம்ம்ம்ம்ம் நிலமை....ம்ம்ம்ம்ம்ம்

Friday, November 17, 2006

ஒரு வரமேனும்

இறையே இதுநாள் நான் எதன் பொருட்டும்
கையேந்தியதில்லை - இதழோரம் ஒரு
ஏளனத்துடன்கடந்திருக்கிறேன் உன்னை ,
பொங்கும் செல்வத்துடனும்
என்னை விரட்டியடித்த வறுமையின் காலங்களிலும்
வணங்கினால் வரம் கிடைக்குமென
எல்லோரும் சொல்லியபோதும்
ஏகடியம் பேசி மறுத்திருக்கிறேன்
இப்போதும் நீ இருக்கிறாயோ
இல்லையோ - தெரியலை இருந்தால்
எனக்களிக்க கண்டிப்பாய் ஒரு வரமேனும்
வைத்திருப்பாய் அல்லவா ! அதை என் இன்னொரு
உயிருக்கு கொடு - அது துன்புரும்
செய்தி உணர்ந்த பின்
எனக்கேது அமைதி ......

Sunday, November 05, 2006

தொலைதல்


நீ தேடுவாய் - என்பதால்

அடிக்கடி தொலைகிறேன்

தொலைவதும் தேடுவதுமாய்

நாட்கள் போகின்றன

திரும்பிப்பார்க்கையில்

நாம் கடந்தது - நாட்களல்ல

யுகங்கள்

Friday, November 03, 2006

இருவருக்கும் ஓர் உலகம்


எனக்கும் உனக்குமாய் ஓர் உலகம்
இருவரும் தாங்கியே பெற்றோம் !
தனி தனியாய் இருக்கையில்
கடந்தவை, சுமந்தவைவலித்தவை அதிகம்...
தீச்சுட்ட புண் ஆறிகரம் பற்றி ஒளி - மிகும்வழி புகுந்தோம் - கவி பாடி களிப்போம் இனி

தோகை


அதோ ! அதோ ! என ஓடிக்கொண்டிருக்கும்பேருந்தின் வழியே
அம்மா காட்ட விழி விரிய பார்த்ததுண்டு
தோழி கொடுத்த பீலியைகுட்டி போடும் என புத்தகத்தில் சுமந்ததுண்டு
சம்ஹார விழாவில் தூரல் விழஆடிய ஆட்டம் கண்ணுக்குள் இன்னும்..
பழனி அடிவாரத்தில் 5 ரூவாய்க்கு 1 எனஅப்பா வாங்கி வந்த தோகையிலமட்டும் நாட்டம் கொள்ளவில்லை - அப்போதும்..இப்போதும்..

ஆரம்பம், இனி ஆரம்பம்



வணக்கம் மயிலிறகின் முதல் வணக்கம்.
இரு உயிர்கள், ஒரு உறவு, அதன் கனவு.
அனைவருக்கும் பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்..மயிலிறகு...ஆரம்பம்