இறையே இதுநாள் நான் எதன் பொருட்டும்
கையேந்தியதில்லை - இதழோரம் ஒரு
ஏளனத்துடன்கடந்திருக்கிறேன் உன்னை ,
பொங்கும் செல்வத்துடனும்
என்னை விரட்டியடித்த வறுமையின் காலங்களிலும்
வணங்கினால் வரம் கிடைக்குமென
எல்லோரும் சொல்லியபோதும்
ஏகடியம் பேசி மறுத்திருக்கிறேன்
இப்போதும் நீ இருக்கிறாயோ
இல்லையோ - தெரியலை இருந்தால்
எனக்களிக்க கண்டிப்பாய் ஒரு வரமேனும்
வைத்திருப்பாய் அல்லவா ! அதை என் இன்னொரு
உயிருக்கு கொடு - அது துன்புரும்
செய்தி உணர்ந்த பின்
எனக்கேது அமைதி ......