Friday, November 03, 2006

தோகை


அதோ ! அதோ ! என ஓடிக்கொண்டிருக்கும்பேருந்தின் வழியே
அம்மா காட்ட விழி விரிய பார்த்ததுண்டு
தோழி கொடுத்த பீலியைகுட்டி போடும் என புத்தகத்தில் சுமந்ததுண்டு
சம்ஹார விழாவில் தூரல் விழஆடிய ஆட்டம் கண்ணுக்குள் இன்னும்..
பழனி அடிவாரத்தில் 5 ரூவாய்க்கு 1 எனஅப்பா வாங்கி வந்த தோகையிலமட்டும் நாட்டம் கொள்ளவில்லை - அப்போதும்..இப்போதும்..

1 comment:

ப்ரியன் said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்